Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் வாயில் முழக்கப் போராட்டம்

ஜனவரி 20, 2023 07:15

சுரண்டை : தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் வாயில் முழக்கப் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் நலச்சங்க சுரண்டை கிளை தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார்.

கௌரவ விரிவுரையாளர்கள் சித்திரைகனி, இளங்கோவன், அண்ணாமலை, ஹேமாகல்யாணி, சந்தணதேவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹரிஹரசுதன் அனைவரையும் வரவேற்றார். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கும் அரசாணை எண் 56 இன் கீழ் பணி வழங்க வேண்டும்.

பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயம் செய்த ஊதியம் வழங்க வேண்டும், மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும். கௌரவ வெளிவராளர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கவுரவ விரிவுரையாளர்கள் பிரியங்கா, கார்த்திகா, அருள்மேரி, ராமவாணி, ஜெகானந்தஜோதி, முத்தரசி, ஜெனிஷா, சுபசங்கரி, கீர்த்தனாதேவி, டெனிஸ்டெய்சி, கார்த்திக்குமாரவேல், சிவாஜி செல்லையா உட்பட அனைத்து கௌரவ விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்